கோவையில் பாஜக சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் -ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

கோவையில் பி.எஸ்.ஜி மருத்துவமனையுடன் பாஜக இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தியது. இதில், வடமதுர, என்.ஜி.ஜி.ஓ., காலனி, துடியலூர், பெரியநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.



கோவை: பாஜக சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம், துடியலூரில் நடைபெற்றது.

கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனி கேட் அருகே ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவு பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு மண்டலம் மற்றும் பி.எஸ்.ஜி.மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தியது.



இதில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகல் நலம், தோல் நல சிகிச்சை, எலும்ம்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை, கண் நலம், கண் புரை அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை மற்றும் பல் நலம் குறித்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



இந்த மருத்துவ முகாமில், வடமதுரை, என்.ஜி.ஜி.ஓ காலனி, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்.



இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ பிரிவு மாநில செய்லாளர் டாக்டர்.பாபு, மாவட்ட தலைவர் டாகடர். சுரேந்திரன் முன்னிலையில் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல தலைவர் புவனேஸ்வரன், மருத்துவ பிரிவு டாக்டர்.மகேஸ்வரன் மற்றும் பொருளாளர் சண்முகவடிவேல், செயலாளர்கள் உதயகுமார், பிரபாவதி, ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சாய்சரவணகுமார் உட்பட பலர் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...