கோவை அருகே மதுபோதையில் சாலையிலேயே படுத்து உறங்கிய பெண் - போக்குவரத்து பாதிப்பு!

பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கிய நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின் அவரை எழுப்பி அனுப்பி வைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் மதுபோதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி - கோவை சாலை பகுதியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இந்நிலையில், போக்குவரத்தை சரி செய்ய காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து உறங்கியுள்ளார்.

தொடர்ந்து, அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அந்த பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி அப்பகுதியில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.



ஆனால் மது போதை தலைக்கு ஏறிய நிலையில் அங்கிருந்த போலீசாரை கேலி, கிண்டல் செய்ததுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அந்த பெண் ஈடுபட்டார்.



போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்த வாகனங்களை சைகை முறையில் கை அசைத்து சிறிது நேரம் போக்குவரத்து பணியை செய்தார். பின்பு நீண்ட நேரம் போராடிய போலீசார் அந்த பெண்ணை அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...