மோடியின் ஈஷா வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பைச் சேர்தோர் கோவையில் கைது

நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தை கண்டும்காணாமல் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், வன ஆக்கிரமிப்பு அமைப்பான ஈஷாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமரை கண்டித்தும் கோவையில் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பவானி ஆறு தடுப்பணை தடுப்பு போராட்டக் குழுவின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட 11  அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியை கண்டித்தும், மத்திய அரசின் தமிழக விரோத செயல்களைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து திடீரென ஆர்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதின் மூலம் மத்திய அரசு தமிழகத்திடம் பாராமுகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், பிரதமர் கலந்து கொள்ளும் ஈஷா விழாவிற்காக வன விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டிருப்பதின் மூலம் அங்கு விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பது உறுதியாவதாகவும் தெரிவித்தார். 

இத்தகைய சட்ட அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஈஷாவின் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வதை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுவதாகவும் கு.ராமகிருட்டிணன் அப்போது தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...