ஈஷாவிற்கு மோடி வருகையை எதிர்த்து கருப்பு பலூன் பறக்கவுடும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் அமைப்பினர்



கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து, வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஈஷா யோகா மைய சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது யானை முகங்களுடனும், கருப்பு பலூன்களுடனும் முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிக்கட்சியினர், வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து போராட்டக்காரர்கள் கைகளில் இருந்த பலூன்களை காவல் துறையினர் உடைத்தனர். 



இப்போராட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறும்போது, ஈஷா யோகா மையத்தினர் காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தும், அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டப்பட்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பது கண்டிக்கத்தகக்து எனவும், இது ஈஷாவின் குற்றச்செயல்களை பாதுகாக்கும் நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...