திருப்பூரில் ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடும் விலை உயர்வு, தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளால் பனியன் தொழில் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இந்த சூழலில் பனியன் தொழிலை நம்பி இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக வாகன ஓட்டுனர்களை வெகுவாக பாதிக்கும் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட ஏ ஐ டி யு சி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், ஆவணங்கள் சரியாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக வழக்கு போடுவோம் என போலீசார் மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டுநர்களை ஒருமையில் கேவலமாக பேசுகின்றனர்.



திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு தாராபுரம் ரோடு பல்லடம் ரோடு அவிநாசி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நாள்தோறும் பலமுறை ஆவணங்களை சரி பார்ப்பதாக கூறி வாகனங்களை காத்திருக்க வைக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.



இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...