வால்பாறை அட்டக்கட்டி பயிற்சி மையத்தில் வனத்துறை, மின்சார துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வனவிலங்குகள் உயிரிழப்பை தடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் வனவிலங்கு உயிரிழப்பை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம் பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச் சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினர், மின்சார துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அட்டகட்டி பயிற்சி மையத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் மற்றும் வனவிலங்குகள் உயிரிழப்பதை எவ்வாறு தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மின் வாரியத்திற்கு தகவல் அளிக்காமல் விவசாய நிலங்களுக்கு மின் வேலி அமைப்பதை தடுக்கவும், மின் வேலியினால் வனவிலங்குகள் இறந்தால் 1972 வன சட்டப்படி 3 முதல் 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.