வால்பாறை அருகே வனத்துறை பயிற்சி மையத்தில் கலந்தாய்வு கூட்டம்

வால்பாறை அட்டக்கட்டி பயிற்சி மையத்தில் வனத்துறை, மின்சார துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வனவிலங்குகள் உயிரிழப்பை தடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கோவை: வால்பாறையில் வனவிலங்கு உயிரிழப்பை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம் பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச் சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினர், மின்சார துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அட்டகட்டி பயிற்சி மையத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.



இக்கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் மற்றும் வனவிலங்குகள் உயிரிழப்பதை எவ்வாறு தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



இதில் மின் வாரியத்திற்கு தகவல் அளிக்காமல் விவசாய நிலங்களுக்கு மின் வேலி அமைப்பதை தடுக்கவும், மின் வேலியினால் வனவிலங்குகள் இறந்தால் 1972 வன சட்டப்படி 3 முதல் 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...