கோவை அருகே ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடிக்கு வீரவணக்கம்!

கோவை அருகே நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், வெலிங்டனில் உள்ள 25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.



கோவை: நாட்டுக்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 30ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சம்பாரி என்ற இடத்தில் உள்ள பனிப்பிரதேச மலைப்பகுதியில் 8 தீவிரவாதிகள் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற போது, அவர்களை எதிர்த்து நின்று போரிட்டு 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணம் அடைந்தார்.



தனி மனிதனாக இருந்து தீவிரவாதிகளை தாக்கி கொன்று வீரமரணம் அடைந்ததை போற்றும் விதமாக, இந்திய அரசு 1996ஆம் ஆண்டு இவருக்கு ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா வழங்கி கவுரவித்தார்.



கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.



இந்நிலையில் அவரது நினைவிடத்தில் நடந்த 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பிரிவின் சுபேதார் மேஜர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான 25 ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய வீரவணக்கம் செலுத்தி பின்னர் கென்னடியின் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...