கோவையில் முதல்வர் புகைப்பட கண்காட்சியில் நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்!

கோவை வஉசி மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" கண்காட்சியை காணவந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மைதானத்தில் நோன்பு திறந்தனர்.



கோவை: முதல்வர் புகைப்பட கண்காட்சியில் இஸ்லாமியர்கள் நோன்பு திறந்தனர்.

கோவை வஉசி மைதானத்தில், "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற புகைப்பட கண்காட்சி கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை தினமும் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்து வருகின்றனர். தினமும் மாலையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த கண்காட்சியை காண, திமுக வடக்கு மாவட்டம் கரும்புக்கடை பகுதி கழக செயலாளர் ஜெய்லாப்தீன் இஸ்லாமிய மக்களை அழைத்து வந்தார்.



புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட இஸ்லாமியர்கள், நோன்பு காலத்தையொட்டி, வஉசி மைதானத்திலேயே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் நோன்பு திறந்தனர்.

இதைத் தொடர்ந்து புகைப்பட கண்காட்சி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ ஆகியவை நடைபெற்றது.



இந்த நிகழ்வுகளில் திமுக மாவட்டச் செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல தலைவர் தமிழ்மறை, மாவட்ட பொருளாளர் ரகுமான் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...