தாராபுரம் வந்த சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் - பொதுமக்கள் தரிசனம்

தாராபுரத்தில் வி.எச்.பி கிராம கோயில் பூசாரிகள் பேரவையில் சார்பில் அழைத்துவரப்பட்ட சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதத்திற்கு, பக்தர்கள் அபிஷேகம் நடத்திய வழிபாடு செய்தனர்.


தாராபுரம்: தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக தாராபுரத்திற்கு சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் அழைத்து வரப்பட்டது.

தாராபுரம் நாடார் தெருவில் உள்ள பழையூர் புதூர் பெரிய காளியம்மன் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டது.

அப்போது, பக்தர்கள் தாங்களாகவே அம்மனுக்கு மஞ்சள்நீர், பால், தயிர், இளநீர் உள்பட 10 விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள சகல பிரச்சினைகளும், தோஷங்களும் நீங்கி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் திருப்பூர் கோட்ட அமைப்பாளர் சின்ன குமரவேல், கோவில் பூசாரி துர்க்கேசன், ரத பூசாரிகள் பாபு, சங்கர், துரை உள்பட பக்தர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...