தாராபுரம் வந்த சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் - பொதுமக்கள் தரிசனம்

தாராபுரத்தில் வி.எச்.பி கிராம கோயில் பூசாரிகள் பேரவையில் சார்பில் அழைத்துவரப்பட்ட சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதத்திற்கு, பக்தர்கள் அபிஷேகம் நடத்திய வழிபாடு செய்தனர்.


தாராபுரம்: தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக தாராபுரத்திற்கு சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் அழைத்து வரப்பட்டது.

தாராபுரம் நாடார் தெருவில் உள்ள பழையூர் புதூர் பெரிய காளியம்மன் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டது.

அப்போது, பக்தர்கள் தாங்களாகவே அம்மனுக்கு மஞ்சள்நீர், பால், தயிர், இளநீர் உள்பட 10 விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள சகல பிரச்சினைகளும், தோஷங்களும் நீங்கி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் திருப்பூர் கோட்ட அமைப்பாளர் சின்ன குமரவேல், கோவில் பூசாரி துர்க்கேசன், ரத பூசாரிகள் பாபு, சங்கர், துரை உள்பட பக்தர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...