திருப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் விதிமீறல் - துணைமேயர் ஆய்வு

மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.



திருப்பூர்: திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ 38 கோடியே 81 லட்சம் மதிப்பில் கடந்தாண்டு புதுப் பொலிவுடன் கட்டப்பட்டது.

தற்போது, பழைய பேருந்து நிலையத்தில் செல்போன் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், என 80க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, அக்கடைக்காரர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளின் வெளியிலேயே பொருட்களை வைத்தும்,ஒரு சில கடைக்காரர்கள்அனுமதியின்றி நடைபாதைகளில் கடைகள் அமைத்தும்,கடைகளின் சுவர்களை இடித்து தனியாக ஒரு அறையும் அமைத்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.



இதைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை திடீர் ஆய்வு செய்தார்.



அப்போது, விதிமுறைகளை மீறி பெரும்பாலான கடைகள், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைத்திருந்ததும், அதேபோல் மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியும் பெறாமல் கடைகளை இடித்து தனியாக ஒரு அறை அமைத்து இருந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு, விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைமேயர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...