குன்னூரில் பேக்கரியில் நுழைந்த கரடி - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

குன்னூர் அருகே உணவு தேடி பேக்கரிக்கு வந்த கரடி, நீண்ட நேரம் போராடியும் கடையை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பகுதியில் சமீபகாலங்களாக கரடிகள், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது அதிகரித்து உள்ளது.

இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியில் கரடி ஒன்று நேற்று இரவு அப்பகுதிக்குள் நுழைந்து, உணவுக்காக அங்குள்ள பேக்கரியின் கதவை திறக்க முயன்றது.



நீண்ட நேரம் போராடியும், பேக்கரியின் கதவை திறக்க முடியாததால் ஏமாற்றமடைந்த அந்த கரடி, அங்கிருந்து வேறு பகுதிக்கு நகர்ந்து சென்றது. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், கரடி நடமாட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்கள், குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...