உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி தலைவர் பதவி நீக்க கருத்து கேட்புக்கூட்டம் ஒத்திவைப்பு!

உடுமலை அருகேயுள்ள போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் முறைகேட்டில் ஈடுபட்டதால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் போதியளவு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், வட்டாட்சியர் கண்ணாமணி கூட்டத்தை வருகின்ற 24ஆம் தேதி ஒத்திவைத்தார்.


திருப்பூர்: போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்செய்வது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்புக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் திமுகவை சேர்ந்த சௌந்தர்ராஜன், பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்திய நிலையில், முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை என அறிக்கை அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அவர் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி கருத்து கேட்புக் கூட்டம் இன்று போடிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், உடுமலை வட்டாட்சியர் கண்ணாமணி தலைமையில் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் போடிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.



ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உடல்நிலை சரியில்லை எனக் கூறி கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வராத காரணத்தால் வருகின்ற 24ஆம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கருத்து கேட்புக் கூட்டத்திற்கு உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...