துடியலூர் அருகே குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து - 3 மணி நேரம் போராடி தீ அணைப்பு!

துடியலூர் அடுத்த அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் புகை மூட்டம் காரணமாக அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதுமாக புகை மூட்டமாக காட்சியளித்தது.

துடியலூரை அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன.

இங்கு அடிக்கடி மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் தீ விபத்து ஏற்படுவது, தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இங்குள்ள குப்பைகளில் இருந்து புகை வந்துள்ளது.



தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திறணல் ஏற்பட்டுள்ளது.



தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...