ஆலாந்துறை வனச்சரகத்தில் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைக்க கோரிக்கை!

கோவை மாவட்டம் ஆலாந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளை கொண்டு தீயை அணைத்து வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஆலாந்துறை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை நாதேகவுன்னடன் புதூர் பகுதியில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக இரவு, பகலாக தீ அணைத்து வரும் நிலையில், மலைப்பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அதிகளவு வன ஊழியர்கள், தன்னார்வலர்களும் சேர்ந்து தீயை அணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள ஹெலிகாப்டரை கொண்டு தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...