தாராபுரம் அருகே சாலையோர குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - பரபரப்பு!

தாராபுரம் அருகே உள்ள ஐந்து சாலை பகுதியில் இருந்த குப்பைகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகிலுள்ள கரூர் சாலையில் அமராவதி ஆற்றங்கரையில் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த பகுதி வழியாக தினந்தோறும் சுமார் ஒரு நாளைக்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

இந்நிலையில் தாராபுரத்தில் வாழும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தப்படும் குப்பை கழிவுகள் மற்றும் தாராபுரத்தில் இயங்கும் உணவகங்கள், இறைச்சி கடைகள் பல்வேறு வியாபார கடைகளில் குப்பை கழிவுகளை தினமும் சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள்.

வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் இந்த குப்பைகள் இயற்கையாகவே தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் 2 மதுபான கடைகள் இருப்பதால் இரவு நேரங்களில் அங்கே அமர்ந்து மது குடிக்கும் சமூக விரோதிகள் தீ வைத்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் அந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் குப்பைகள் கொழுந்து விட்டு எரிந்தது.



இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



தாராபுரத்தில் சாலை ஓரங்களில் அடிக்கடி இது போன்று நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நோய் தொற்று உருவாகுவதால் மேலும் இது போல் நடக்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...