கோவை மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருட்டு!

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 20ஆண்டுகளாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமராவை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மதுக்கரை குவாரி ஆபிஸ் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் 20 ஆண்டுகளாக அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று காலையில் வந்து பார்த்த போது, கடையின் முன் பக்க ஷட்டரை கியாஸ் கட்டிங் மூலம் வெட்டி திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமரா திருடப்பட்டதும், உள்ளே மிளகாய் பொடியைத் தூவிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலையில் மர்ம நபர்கள் கியாஸ் கட்டிங் மூலம் ஷட்டரை உடைத்து, உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராவை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் குணசேகரின் கடையின் அருகே உள்ள இளையராஜா என்பவரது, பைனான்ஸ் நிறுவனத்தின் ஷட்டரையும் மர்ம நபர்கள் வெட்ட முயன்றதும், ஆனால் ஷட்டர் கதவு சுவருடன் இணைக்கப்பட்டிருந்ததால், அங்கேயும் மிளகாய் பொடியைத் தூவி விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...