பஞ்சாப் துப்பாக்கிச் சூடு - பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் கோவை வருகை!

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 வீரர்களின் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டது. வீரர்களின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் தேனி மாவட்டம் தேவாரத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது.



கோவை: பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வனவாசியை சேர்ந்த தறி தொழிலாளியின் மகன் கமலேஷ். 24 வயதான கமலேஷ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் சேவையாற்றி பணியாற்றி வந்த அவர், நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்தார்.



இதையடுத்து, இராணுவ வீரர் கமலேஷ் உடல் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.



கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மற்றொரு தமிழக வீரர் தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த 23 வயதான யோகேஷ் குமார் ஆவார். வீட்டிற்கு ஒரே மகனான இவர், ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றி வந்ததுடன், தனது பெற்றோர்களுக்கு புதிதாக வீடும் கட்டிக்கொண்டு வந்துள்ளார்.

திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வந்த நிலையில் யோகேஷ்குமார் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இவரது உடல் சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான தேனிக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...