தமிழக முதலமைச்சர் 70வது பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
கோவை: முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ மரக்கன்றுகள் நடும் பணியைத் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டும் வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 52வது வார்டு, பீளமேடு, அண்ணாநகர் பகுதியில் மரக்கன்றுகளைக் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) நட்டு வைத்தார்.
இந்த நிகழ்வில், விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் பூர்ணசந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பலர் கலந்துகொண்டனர்.