பெண் காவலர்களின் பொன்விழா - கோவையில் 50 கி.மீ சைக்கிள் பயணம்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு கோவையில் 50 கி.மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.



கோவை: பெண் காவலர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக 50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்படுகிறது. பெண் காவலர்களின் சேவையை போற்றி மரியாதை செய்யும்விதமாக கோவையில் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது.



'நோ ஹெல்மெட், நோ ரைடு ... ஃபாலோ ரோட் ட்ராபிக் ரூல்ஸ்' என்ற விழிப்புணர்வுடனும் இந்த சைக்கிள் பயணம் நடந்தது. பிரபல சைக்கிளிங் வீரரான விஷ்ணு ராம் என்பவர் முயற்சியில் இந்த சைக்கிள் பயணம் நடந்தன.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சுகாசினி, சைக்கிளிங் வீரர் விஷ்ணு ராம், காவலர்கள், பொதுமக்கள் என 120 பேர் கலந்துகொண்டனர்.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆரம்பித்த இந்த சைக்கிள் பயணம் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், பேரூர் வழியாக செல்வபுரம் வந்தடைந்தனர். 50 கிலோ மீட்டர் தூரத்தினை 2 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...