கிணத்துக்கடவில் கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு குவியும் பாராட்டு!

கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவுநீர் கால்வாய் அமைக்க நிலம் தானம் செய்த ரஞ்சனி என்பவருக்கு, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதூர் ஊராட்சியில் அண்ணா நகர் முதல் காந்திநகர் வரை உள்ள 700 மீட்டருக்கு கழிவுநீர் கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக, அப்பகுதி சேர்ந்த சுப்பாராவ் என்பவரது மனைவி, ரஞ்சனி ஊராட்சி நிர்வாகத்திற்கு தங்களது நிலத்தை தானம் செய்தார்.

இதனிடையே, ரஞ்சனி தானம் செய்த நிலத்தில் தற்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.



இந்நிலையில், வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணிகண்டாபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு பாராட்டு விழா, குப்பைகளை எடுக்க ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட டிராக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.



ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு நிலம் தானம் செய்த நபருக்கும், இதற்கு உதவியாக இருந்த ஊர் மக்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.



மேலும் பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் கால்வாய் கட்டிய ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணம்மாள், அசோக்குமார், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பாரதிநகர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...