உக்கடம் அருகே சாலையோரங்களில் நிற்கும் இருசக்கர வாகனங்களில் தொடரும் பெட்ரோல் திருட்டு!

உக்கடம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: உக்கடம் அருகே சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பொள்ளாச்சி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்து நிலையம் அருகேயுள்ள உக்கடம் காவல் நிலையம் காம்பவுண்ட் சுவரின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு பொள்ளாச்சி சென்றார்.

அங்கு தனது வேலைகளை முடித்து விட்டு மீண்டும் உக்கடம் வந்து, இருசக்கர வாகனத்தை இயக்க முயற்சித்த போது முடியவில்லை. இதையடுத்து பார்த்த போது, பெட்ரோல் டேங்க் திறந்து கிடந்தது தெரியவந்தது. உள்ளே பார்த்த போது பெட்ரோல் சுத்தமாக இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காலையில் தான் 3 லிட்டர் நிரப்பிக்கொண்டு வந்ததாகவும், ஆனால் முற்றிலும் பெட்ரோல் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் யாரோ பெட்ரோலை திருடி இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு மீண்டும் சென்றார். கோவையில் அண்மை காலமாக இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களிலும் பெட்ரோல் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது, உக்கடம் பேருந்து நிலையமானது 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன்ஹால் வரை கடைகள் அடர்த்தியாக நெருக்கமாக இருக்கும்.

கடைகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூட அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருந்தும் இப்பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் தொடர் பெட்ரோல் திருட்டு நடப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் அதனை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக சென்று விடுகின்றனர். பெரிய திருட்டு நடந்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் இந்த பெட்ரோல் விஷயத்துக்காக புகார் கொடுப்பதா என்று பலரும் ஏமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு செல்வதை காண முடிகிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும். அவ்வாறு பல்வேறு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் பெட்ரோல் திருட்டு தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...