ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குக - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தாராபுரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தாராபுரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை சளி, காய்ச்சல், உடல் வலி ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ்வாறு உடல் நிலை சரியில்லாத போது இவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் நேற்று முன்தின நிலவரப்படி 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலர் மர்ம காய்ச்சலுக்கு இறந்ததாக மக்களிடையே கருத்து நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் காரணமாக கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே அரசு உடனடியாக கொரோனா பரிசோதனைகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைகளை கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...