மூலனூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

தாராபுரம், குண்டடம் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் மூலனூர் - தாராபுரம் இடையே உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் - தாராபுரம் செல்லும் சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வெள்ளகோவில், மூலனூர், குளத்துப்பாளையம் வழியாக தாராபுரம், குண்டடம் ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் மூலனூர் - தாராபுரம் செல்லும் சாலையில் சோமன் கோட்டை பிரிவு அருகே கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாக ஓடுகிறது.



கோடை காலத்தில் அதிகமான குடிநீர் சாலையில் வீணாக செல்வது வேதனையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...