கோவை வந்தடைந்த பொன்னியின் செல்வன் படக்குழுவினர் - டுவிட்டரில் பதிவு!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படக் குழுவினர் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்துள்ளனர்.


கோவை: பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க கோவைக்கு வருகை புரிந்துள்ள திரைப்பட குழுவினர்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்வுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் படத்தின் விளம்பர நிகழ்வு நடைபெறுகிறது. சரவணம்பட்டி பகுதியில் உள்ள Prozone (தனியார்) மாலில் இந்நிகழ்வு இன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெறுகிறது.



இதனை முன்னிட்டு படக்குழுவினர் விமானம் மூலம் கோவை வந்தடைந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தற்போது கோவைக்கு வருகை புரிந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...