காட்டுத்தீயை தடுக்க மாவட்டந்தோறும் குழுக்கள் - வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டுத்தீ பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், குழுவிலும் 20 முதல் 25 இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.



கோவை: கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக மாவட்டம் தோறும் 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு பேசியதாவது, கோவை ஆலாந்துறை அருகே கடந்த ஐந்து நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டு தீ பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் காட்டு தீ தடுப்பு நடவடிக்கையாக நான்கு முதல் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 25 இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...