தாராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி - போலீசார் விசாரணை

தாராபுரம் அருகே விவசாய நிலத்தில் புதிதாக வெட்டப்பட்டு வந்த கிணற்றில், கரூர் அருகே ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் தனது தோட்டத்தில் புதிதாக கிணறு அமைத்து வருகிறார்.

கிணறு வெட்டும்பணியில் காணிக்கம்பட்டி கரூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், சில தொழிலாளர்கள் கிணற்றின் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலையில் கூடாரத்தில் தங்கியிருந்த கரூர், பாளையம் அருகே உள்ள ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது 45), என்பவரைக் காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், சந்தேகமடைந்து 70அடி ஆழமுள்ள கிணற்றில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தி பார்த்தனர். அப்போது இறந்த நிலையில் பெருமாள் கிணற்றில் சடலமாகக் கிடந்தார்.

இது குறித்து குண்டடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புதுறையினர் மூலம் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தொழிலாளி பெருமாள் இரவில் தவறுதலாக கிணற்றுப் பக்கம் சென்று தவறி விழுந்தது இறந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...