திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் தாராபுரம் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 230 க்கும் மேற்பட்டோர் சீருடை அணிந்து பங்கேற்றனர்.

இந்தப் பேரணியையொட்டி மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார்தலைமையில் 250போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மூலனூர் அண்ணா நகர்பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக மூலனூர் பேருந்து நிலையம்வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க சென்று,மூலனூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியையொட்டி மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார்தலைமையில் 250போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மூலனூர் அண்ணா நகர்பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக மூலனூர் பேருந்து நிலையம்வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க சென்று,மூலனூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நிறைவடைந்தது.