திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் விருது!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் விஜிலா. இவருக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வியாளருக்கான சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது


திருப்பூர்: திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் சேவை விருது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றுபவர் விஜிலா. இவர், பல்வேறு பணியிடை பயிற்சிகளில், கருத்தாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஆங்கில பாடத்துக்கான, கையேட்டினை வடிவமைத்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். இவரது பணிகளை பாராட்டி, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வி சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் தலைமை வகித்து விருது வழங்கினர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...