தர்பூசணி விளைச்சல் பாதிப்பு - உடுமலை விவசாயிகள் கவலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெயில் காரணமாக இந்த சீசனில் தர்பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. கொள்முதல் விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில், தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக, மேட்டுப்பாத்தியில், நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து, விதைகளை நடவு செய்கின்றனர்.



செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகின்றனர். இதனால், ஏக்கருக்கு 20 டன் வரை தர்பூசணி விளைச்சல் கிடைத்துவருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல், தர்பூசணி விளைநிலங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில், சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை தொடங்கியுள்ளது.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, தர்பூசணியை கிலோ, 12 – 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது. அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு 2 டன் வரை விளைச்சல் குறைந்துவிட்டது. சாகுபடி செலவு அதிகரித்து நிலையில், விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும், என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...