கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட பகுதியில் உடல்நிலைக் குறைவின் காரணமாக இருந்த காட்டு யானை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக மழையின்றி பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சரியான மழைப்பொழிவின்றி வனப் பகுதிகளும் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
இதில், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தண்ணீர் இன்றி வனப் பகுதியே வறண்டு காணப்படுகிறது. இதனால் அங்குள்ள வன விலங்குகள் நீரின்றி பெரிதும் தவித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றி உடல்நிலைக் குறைபாடின் காரணமாக கீழே விழுந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த முதுமலை புலிகள் சரணாலயம் இயக்குநர் சீனிவாச ரெட்டி, கால்நடை மருத்துவர் விஜயராகவன், வன அலுவலர் ஞானதாஸ் உள்ளிட்ட வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்நிலை குன்றிய அந்த பெண் யானைக்கு முதலுதவி மற்றும் உணவுகளை அளித்தனர்.
தொடர்ந்து அந்த யானையை நிற்கவைக்கும் முயற்சியில் முதுமலை புலிகள் சரணாலயத்தின் கும்கி யானைகளான பொம்மன், ஜான், சந்தோஷ் மற்றும் ஜம்பு ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தொடர்ந்து முதுமலை புலிகள் சரணாலயத்தில் நிலவிவரும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக வன விலங்குகளான காட்டு எருமை, யானை, மான், கரடி, புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்டவை அடர்ந்த வனப்பகுதிகளை நோக்கி இடப்பெயர்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து கூறிய முதுமனை சரணாலய வன அலுவலர், இனி வரும் காலங்களில் சரியான மழை பெய்யவில்லை எனில் வனப்பகுதிகளில் தற்போது உள்ள சூழலை விட கடுமையான பிரச்சனைகள் ஏற்படும், வன விலங்குகளின் உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக மழையின்றி பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சரியான மழைப்பொழிவின்றி வனப் பகுதிகளும் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
இதில், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தண்ணீர் இன்றி வனப் பகுதியே வறண்டு காணப்படுகிறது. இதனால் அங்குள்ள வன விலங்குகள் நீரின்றி பெரிதும் தவித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றி உடல்நிலைக் குறைபாடின் காரணமாக கீழே விழுந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த முதுமலை புலிகள் சரணாலயம் இயக்குநர் சீனிவாச ரெட்டி, கால்நடை மருத்துவர் விஜயராகவன், வன அலுவலர் ஞானதாஸ் உள்ளிட்ட வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்நிலை குன்றிய அந்த பெண் யானைக்கு முதலுதவி மற்றும் உணவுகளை அளித்தனர்.
தொடர்ந்து அந்த யானையை நிற்கவைக்கும் முயற்சியில் முதுமலை புலிகள் சரணாலயத்தின் கும்கி யானைகளான பொம்மன், ஜான், சந்தோஷ் மற்றும் ஜம்பு ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தொடர்ந்து முதுமலை புலிகள் சரணாலயத்தில் நிலவிவரும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக வன விலங்குகளான காட்டு எருமை, யானை, மான், கரடி, புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்டவை அடர்ந்த வனப்பகுதிகளை நோக்கி இடப்பெயர்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து கூறிய முதுமனை சரணாலய வன அலுவலர், இனி வரும் காலங்களில் சரியான மழை பெய்யவில்லை எனில் வனப்பகுதிகளில் தற்போது உள்ள சூழலை விட கடுமையான பிரச்சனைகள் ஏற்படும், வன விலங்குகளின் உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.