கோவை முதல் விற்பனையகத்தை தொடங்கும் ஆர்ட்டினாக்ஸ் மாடுலர் கிச்சன்ஸ்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நவீன மாடுலர் கிச்சன்களை தயாரித்து வழங்கும் ஆர்ட்டினாக்ஸ், அதன் முதல் காட்சியகத்தை இன்று கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கியுள்து. 



இதன் துவக்க விழாவில் பிரபல திரைப்பட இயக்குனரான பாலா, கோவை மாநகரின் காவல்துறை உதவி ஆணையர் அனிதா, பிரபல திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆர்எம்பி கம்ப்ரஸர்ஸ்-ன் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநரான தேவிகா ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விற்பனையகத்தினை துவக்கி வைத்தனர்.

இந்த விற்பனை மையத்தில் மாடுலர் கிச்சன்கள் டேபிள்வேர், வார்ட்ரோப்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீ; பர்னிச்சர், கண்ணாடிகள் மற்றும் வேனிட்டிஸ் என பல்வேறு வகைகளில் ஆர்ட்டினாக்ஸ் பிராண்டின் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.



இந்நிகழ்ச்சியில் கோவை ஆர்ட்டினாக்ஸ் காட்சியகத்தின் பங்குதாரர் அருண் நாகராஜ் பேசுகையில், "இந்திய சமையலறைகள் மற்றும் சமையல் பழக்கவழக்கங்கள் மாறியிருக்கின்றன. இந்தியர்கள் விரும்புகிற சமையலறைகளின் வகை மற்றும் விருப்பத்தேர்வில் குறிப்பிடத்தக்க நகர்வு கண்கூடாக தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் சமையலறைகள் என்பவை மெல்லியதாக, நவீன தோற்றத்துடன் ஸ்டைலானதாக, நடைமுறை வசதி கொண்டதாக தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதாக இருப்பது அவசியமாகும்.

100 சதவிகிதம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவாக்கப்பட்டுள்ள சமையலறைகளின் வழியாக இத்தேவையை இந்த பிராண்டு பூர்த்தி செய்ய விழைகிறது. ஒற்றை வடிவமைப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேபிள் டாப்புடன் சிங்க் மற்றும் ஒரு ஐலேண்ட் சிம்னி, ஒருங்கிணைக்கப்பட்ட பிற சாதனங்கள், சமையல் பணி மேற்கொள்வதற்கு ஒரு தாராளமான இடவசதி மற்றும் விருப்பத்திற்கேற்ற பிரத்யேக வண்ணத்தில் கிடைப்பது ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு இங்கு கிடைக்கக்கூடிய ஈர்ப்பு அம்சங்களாக இருக்கின்றன" என்று கூறினார். 



ஜின்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெடின் தலைமை செயல் அலுவலர் டோமி செபாஸ்டியன் பேசுகையில், "இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் தேவைகள் மாறி வருகின்றன. மாடுலர் கிச்சன்கள், பிரிமீயம் வீட்டு அலங்காரம் ஆகியவற்றின் மீது செலவு செய்யவும், அவர்கள் முதலீடு செய்யவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆர்ட்டினாக்ஸ், இந்திய சந்தைகளுக்கு நவீன மாடுலர் கிச்சன்களை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் வழங்குகிறது. ஈரமான மற்றும் எண்ணெய் நிறைந்த இந்திய சமையல் நிலைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிச்சன் நவீன மாடலாகவும், நேரோடியாகவும் மற்றும் குறைந்த அளவுள்ளதாகவும், அதேவேளையில் நமது பாரம்பரிய தேவைகளை பூர்த்திசெய்ய கவனம் செலுத்துவதாகவும் இருக்கிறது" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...