கோவைப்புதூர் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சோகம்!

கோவைப்புதூர் அருகே ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மோகன பிரியா என்ற 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவைப்புதூர் அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மோதிய விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த மோகனப்பிரியா (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மோகனப்பிரியா மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரும் தற்போது கோவையில் வசித்து வந்தனர். மோகனப்பிரியா தனியார் வங்கியில் பணியாற்றி வந்த நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

மோகனபிரியாவை, தினமும் அவரது கணவர் மனோஜ்குமார் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு அழைத்துச் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மனோஜ்குமார் தனது மனைவி மோகனபிரியாவை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது கோவைப்புதூர் பிரிவு அருகே வந்த போது பின்னால் அதிவேகமாக ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மனோஜ்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மோகனப்பிரியா, லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மோகனப்பிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோகனப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக லாரியை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மாதம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுரளி கிருஷ்ணா (36) என்பவரை கைது செய்தனர்.

கூடுதல் பாரத்துடன் வாகனங்களை இயக்கினாலோ, அதி வேகமாக வாகனங்களை இயக்கினாலோ கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...