கோவை அரசு கல்லூரியில் பொதுநிர்வாக மன்ற விழா - மாநகராட்சி ஆணையாளர் மாணவர்களுக்கு ஆலோசனை

கோவை அரசு கலைக்கல்லூரி பொது நிர்வாகத்துறை மன்ற விழாவில் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கலந்து கொண்டு UPSC உள்ளிட்ட அரசுத்‌ தோ்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்‌, மாணவர்களை ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌ UPSC தேர்வில்‌ எப்படி எளிதாக தோர்ச்சி பெறுவது என்பது குறித்தும்‌ ஆலோசனைகளை வழங்கினார்‌.


கோவை: அரசு தேர்வில் எளிதாக தேர்ச்சிப் பெறுவது குறித்து மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆலோசனை வழங்கினார்.

கோயம்புத்தூர்‌ அரசு கலைக்கல்லூரியில், பொது நிர்வாகத்துறை மன்ற விழா 2022-23 கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கலந்து கொண்டு மன்ற விழாவினை தொடங்கி வைத்தார்‌.

அப்போது அவர் பேசியதாவது, கோயம்புத்தூர்‌ அரசு கலைக்கல்லூரி பொது நிர்வாகத்துறை சார்பில்‌ நடத்தப்படுகின்ற, இந்த மன்ற விழாவில்‌ பங்கேற்பதில்‌ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்‌.



மாணவர்கள்‌ ஆர்வமுடனும்‌, அக்கறையுடனும்‌ UPSC உள்ளிட்ட அரசுத்‌ தோ்வுகளுக்கு படிக்க வேண்டும்‌. எனவே பொது நிர்வாகத்துறையில்‌ படிக்கும்‌ மாணவர்கள்‌ பல்வேறு அரசு போட்டித்தோவுகளை எழுத முன்வர வேண்டும்‌. என்ன படிக்கலாம்‌ என்பது குறித்து உயர்வான எண்ணங்களை IAS, IPS, IRS, போன்ற உயர்‌ பதவிகளுக்கு வர வேண்டும்‌ என எண்ணி படிக்க வேண்டும்‌.

அப்படி எண்ணி படித்தால்‌ மட்டுமே உயர்‌ பதவியை எட்ட முடியும்‌. மாணவர்கள்‌ படிக்கும்போது தினசரி நாளிதழ்களை படிக்கும்‌ எண்ணத்தை வளர்க்க வேண்டும்‌. அன்றாட வாழ்வில்‌ நாளிதழ்கள்‌ வாசிப்பது மிகவும்‌ முக்கியமானதாகும்‌.

மேலும்‌, போட்டித்தேர்வுகளுக்கான பல்வேறு நூல்களை படிப்பதற்கு திட்டமிட்டு, காலத்தை ஒதுக்கி அக்கறையுடனும்‌, ஆர்வத்துடனும்‌ படிக்க வேண்டும்‌. இன்றைய அறிவியல்‌ வளர்ச்சியில்‌ பல்வேறு தனியார்‌ பயிற்சி மையங்களுக்கு சென்று தான்‌ படிக்க வேண்டும்‌ என்ற அவசியம்‌ இல்லை. அறிவியல்‌ தொழில்நுட்ப வளர்ச்சியை பெற்றுள்ளது.

WhatsApp, Websites, YOUTUBE, GOOGLE போன்ற வழிகளில்‌ போட்டித்‌ தேர்வுகளுக்கு படிக்க தேவையான நால்கள்‌ கிடைக்கின்றன. எனவே மாணவர்கள்‌ தங்கள்‌ வாழ்வினை மேம்படுத்திக்‌ கொள்ள உயர்‌ பதவிகளுக்கு வர வேண்டும்‌ என உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்‌ என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...