பல்லடத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி - தலைக்கவசம் அணியும்படி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் பகுதியில் நாளுக்குநாள் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், பல்லடம் போக்குவரத்து காவல்துறை மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் ஆகியோர் இணைந்து தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் நால்ரோட்டில் இருந்து செட்டிபாளையம் பிரிவு வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பல்லடம் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இதில், தலைக்கவசம் அணிந்தபடி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்றனர். அப்போது, தலைக்கவசம் அணிவது அவசியம் எனவும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும்ம் பொது மக்களிடையே அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...