பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. தேக்குவட்டை பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சிவானந்த காலணி பகுதியில் பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுமெனவும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தமிழகம் பாலைவனமாகும் அபாயம் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கேரள அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகள் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. தேக்குவட்டை பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சிவானந்த காலணி பகுதியில் பவானி ஆறு போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுமெனவும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தமிழகம் பாலைவனமாகும் அபாயம் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கேரள அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகள் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.