கோவையில் சிறுவனுக்கு சூடு வைத்த வளர்ப்பு தந்தை - போலீசில் புகார்!

கோவையில் 7வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த வளர்ப்பு தந்தை மீது, சிறுவனின் தந்தை உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் சிறுவனுக்கு வளர்ப்பு தந்தை சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம் (33), இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் சர்மதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சர்மதா இப்ராஹிமை பிரிந்து தனது மகனுடன் ஆட்டோ ஓட்டுநரான சாதிக்(38) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் குழந்தையின் வளர்ப்பு தந்தையான சாதிக் கடந்த 15 ஆம் தேதி தோசை கரண்டியால் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து கோவை வந்த தந்தை இப்ராஹிடம் சிறுவன் நடந்ததை கூறியுள்ளார். சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை இப்ராஹிம் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...