திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவருக்கு வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வழக்கில் ஆஜராக கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சக வழக்கறிஞர்களுடன் சேர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே இளம் வழக்கறிஞருக்கு வாட்ஸ் அப் கால் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஆனந்த் என்கிற பாலசுப்பிரமணி. இவர் திருப்பூர் நீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தொலைபேசி வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.
அதில் ஆனந்த் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே தொடர்பு எண்ணில் இருந்து வாட்ஸப் காலில் வந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட வழக்கிற்கு ஆஜராக கூடாது எனவும் மீறி ஆஜரானால் கோர்ட்டிலேயே கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் மற்றும் திருப்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய சக வழக்கறிஞர்களுடன் இணைந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஆனந்த் என்கிற பாலசுப்பிரமணி. இவர் திருப்பூர் நீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தொலைபேசி வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.
அதில் ஆனந்த் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே தொடர்பு எண்ணில் இருந்து வாட்ஸப் காலில் வந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட வழக்கிற்கு ஆஜராக கூடாது எனவும் மீறி ஆஜரானால் கோர்ட்டிலேயே கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் மற்றும் திருப்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய சக வழக்கறிஞர்களுடன் இணைந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.