பல்லடம் பிரத்தியங்கரா தேவி கோயிலில் யாகக் குண்டம் - கூடைகூடையாய் வர மிளகாயைக் கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள உக்ர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நிகுபல யாக குண்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் கூடை கூடையாக வரமிளகாய்களைக் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோவில் மற்றும் உக்கிர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நிகுபல யாக பூஜை நடைபெற்றது.



இந்த யாகத்தில் காய்ந்த மிளகாய், பலகாரங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு வந்து, கூடை கூடையாக யாக குண்டத்தில் கொட்டி வழிபாடு செய்தனர்.



இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களிடம் இருந்து, தீய சக்திகள், பில்லி -சூனியங்கள் விலகும் எனவும், தொழில் வளர்ச்சி, குழந்தையின்மை, திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய், காய்கறிகள் ஆகியவற்றை பிரத்தியங்கிரா தேவிக்கு படைத்து, பின்னர் யாக குண்டத்தில் கொட்டினர்.



பொள்ளாச்சி, நல்லூர், சோமனூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த யாகபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...