கோவை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம்

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், துடியலூர் காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமிக்கப்பட்டார்.


கோவை: துடியலூர் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சேரன் நகர், ஐ.டி.ஐ. இடையர்பாளையம், ஜி.என்.மில்ஸ், வெள்ளக்கிணர், துடியலூர், விஸ்வநாதபுரம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, அப்பநாயக்கன்பாளையம், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளை காவல் எல்லையாகக் கொண்டு துடியலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ரத்தினகுமார் துடியலூர் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று துடியலூர் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் ரத்தினகுமார் அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இரத்தினக்குமர் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் தெற்கில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...