கிருஷ்ணகிரி ஆணவக்கொலையை கண்டித்து திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக தந்தையே மகனை கொலை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தந்தையே மகனை சாதி ஆணவக்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து, திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அருணாபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மகன் சுபாஷ் சாதி மறுத்து வேறு சாதியை சேர்ந்த காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கு சுபாஷின் தந்தை தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சொந்த ஊர் சென்ற சுபாஷை அவரது தந்தை தண்டபாணி சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார். உடன் வந்த அனுசுயாவையும் இதனை தடுத்த தண்டபாணியின் தாய் கண்ணம்மாவையும் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுபாஷ், கண்ணம்மா உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் அனுசுயா மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகம் முழுவதும் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...