கோவை அருகே ஊருக்கு புகுந்த யானைக் கூட்டம்..! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்..!

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் காட்டு யானைக்கூட்டம் நுழைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் உலா வந்த யானைக்கூட்டத்தை வனத்துறையினர் உதவியுடன் அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இவைகள், உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய 8 காட்டு யானைகள் கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன.



இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரின் உதவியுடன், ஊருக்குள் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தை அப்பகுதி மக்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல நேற்று அதிகாலை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு ஒற்றை யானை புகுந்துள்ளது. கோடை வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதால், தண்ணீர் மற்றும் உணவுதேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...