கல்வியும், மருத்துவமும் இலவசாமாக வழங்கப்பட வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாநகர, கிழக்கு மண்டல முதல் மாநாடு சிங்காநல்லூர் அருகே உள்ள சக்கரை செட்டியார் நகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டினை பிரவீன் கொடியேற்றி துவங்கி வைத்தார்.

இம்மாநாட்டிற்கு எஸ்.ஆறுமுகம், கே.சி.மூர்த்தி, ஆர்.ஜீவபாரதி ஆகியோர் தலைமை வசித்தனர். ஜி.பி.சக்திவேல் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். கே.புருசோத்தமன் மற்றும் வே.வசந்தகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.பாலசந்திரன், பி.முருகன், வெ.ஜீவானந்தம், ச.பூர்ணிமா நந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக ஆர்.பிரகாஷ், செயலாளராக எஸ்.ஆறுமுகம், பொருளாளராக எம்.மணிகண்டன், துணைத்தலைவர்களாக ச.பூர்ணிமா நந்தினி, ஜே.ஸ்டாலின், வி.நாகராஜ், துணைச் செயலாளராக எம்.வீரசீனு, கே.காளிதாஸ், ஏ.விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில் கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசாமாக வழங்கப் படவேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். ஹோப் காலேஜ், சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையை கடக்க சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும். 



மேலும், கிழக்கு மண்டலப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட வேண்டும். அதேபோல பொழுதுபோக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே கடவில் உள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...