பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுவந்த பால் விற்பனையாளர் - கோவை அரசு மருத்துவமனையில் பலி

கோவை அரசு மருத்துவமனையில் பாம்புக் கடிக்காக சிகிச்சை பெற்றுவந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பால் விற்பனையாளர் விஜயகுமார் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராசக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது37). பால் விற்பனையாளர். இவர் கடந்த 8 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்புல் வெட்டியுள்ளார். அப்போது, அங்கு பதுங்யிகிருந்த விஷப்பாம்பு ஒன்று அவரது கையை கடித்துள்ளது.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, மருந்துவர்கள் பரிந்துரையை ஏற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமார் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...