கோவை பொறியாளரிடம் பணமோசடி - சென்னை பட்டதாரி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என கோவை பொறியாளரிடம் அறிமுகமாகி நூதன முறையில் ஏமாற்றிய சென்னை அமைந்தகரைப் பகுதியைச் சேர்ந்த முத்துபாலாஜியை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை கே.ஆர்.புரம் முருகன் கோயில் வீதியை சேர்ந்தவர் செந்தில் வடிவேல் (வயது54). மெக்கானிக்கல் இன்ஜினியர். இவருடன் சமூக வலைதளத்தில் அறிமுகமான நண்பர் ஒருவர், ஆன்லைன் டிரேடிங் முறையில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய செந்தில் வடிவேல், ஒரு லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால், கூறியபடி லாபம் கிடைக்கவில்லை. இதனால் செந்தில்வடிவேல் தன் முதலீட்டு தொகையை திரும்ப கேட்டார். அதன்பிறகு அந்த நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த செந்தில் வடிவில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் நம்பிக்கை மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரைத் தேடிவந்தனர்.



இந்த நிலையில், இணையத்தில் பழக்கமாகி பணம் பெற்று மோசடி செய்த அந்த நபர் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி நவீன் என்கிற முத்து பாலாஜி (வயது33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து நவீன் என்கிற முத்து பாலாஜியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர் யார் யாரிடம் இதேபோல் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...