முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா - பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வன விலங்குகள் உணவுதேடி சாலை ஓரத்திற்கு வருவது அதிகரித்து உள்ளது. அவற்றை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. புலிகள், காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

தற்போது கோடை காலம் என்பதால், வனவிலங்களுக்கு குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெற தொடங்கியுள்ளன.



குறிப்பாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு தேடி மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலைக்கு வரத் தொடங்கியுள்ளன.



சாலை ஓரத்தில் உள்ள புற்களை மேயும் இந்த வனவிலங்குகளை, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



குறிப்பாக, சாலை ஓரத்தில் சுற்றி தெரியும் ஆண் மயில்கள், அடிக்கடி பெண் மயில்களை கவரும் வகையில் தோகை விரித்தாடுவதை ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...