கோவையில் மருமகளை தாக்கிய மாமனார், மாமியார் மீது வழக்கு!

பொள்ளாச்சி வடக்குத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனப்ரியா(33). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சான்றிதழ் எடுக்க கணவர் வீட்டிற்கு வந்த மோகன பிரியாவை மாமனார், மாமியார் தாக்கியதால் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: மகாலிங்கபுரத்தில் மருமகளை தாக்கிய மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன பிரியா (33). இவர் கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களாக மோகனப்பிரியா கணவரை பிரிந்து பொள்ளாச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தனது கணவரது வீட்டில் உள்ள கல்லூரி படிப்பு சான்றிதழ்களை எடுக்க நேற்று மோகன பிரியா வெள்ளலூர் வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த மோகனபிரியாவின் மாமனார் மாதையன் (68), மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் மோகனப்பிரியாவை தகாத வார்த்தைகளால், பேசியதோடு அவரை தாக்கியுள்ளனர்.

இதில் முகத்தில் காயமடைந்த மோகனப்பிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோகனப்பிரியா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் மாமனார் மாதையன் மற்றும் மாமியார் விஜயலட்சுமி மீது போத்தனூர் போலீசார் பெண் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...