அன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி சார்பில் தாளத்துறை பொறுப்பாளர் ருக்மணி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
அன்னூர் சாலை, பொகளூர், தாளத்துறை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில் டாஸ்மாக் கடை எண் 1502 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையினால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், அந்த பட்டியலிலும் இந்த கடை இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு டாஸ்மாக் கடை எண் 1502-ஐ அகற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
அன்னூர் சாலை, பொகளூர், தாளத்துறை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில் டாஸ்மாக் கடை எண் 1502 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையினால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், அந்த பட்டியலிலும் இந்த கடை இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு டாஸ்மாக் கடை எண் 1502-ஐ அகற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.