உடுமலையில் கழிவு நீர் வாகனங்களை பதிவு செய்து உரிமம் பெற நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!

உடுமலை நகராட்சியில் உள்ள கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் குறித்த தகவல்களை நகராட்சியில் பதிவு செய்து, 2 ஆண்டுகள் செல்லும் வகையிலான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் சத்தியநாதன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உடுமலை நகராட்சியில், மனித கழிவுகள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால், 2 ஆண்டு செல்லும் வகையில், விண்ணப்பித்த 15 நாட்களில் உரிமம் வழங்கப்படுகிறது.



எனவே, கழிவுநீரை அகற்றும் வாகனங்கள் குறித்து, உடுமலை நகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை, பொது இடங்களில் கொட்டக்கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...