கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

துடியலூர் பேருந்து நிலையம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: துடியலூர் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதனை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.



கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

அதேபோல், அதிமுக சார்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை அதிமுக புறநகர் வடக்குமாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் கவிசந்திரமோகன், ஐ.டி.விங்க் மாவட்ட செயலாளர் மணிகண்டன், அவை தலைவர் ஐ.டி.ஐ. ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் வனிதாமணி, மாரிச்சாமி, வட்ட செயலாளர்கள் சாந்திபூஷன், பந்தல்வீடு பிரகாஷ், ஜெயக்குமார், சுரேஷ், சுரேஷ்பாபு, காளிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...