திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனர் கணபதி (55) கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த போது, திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை காண்பிக்க இறங்கிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). லாரி ஓட்டுநரான இவர் நேற்று மதியம் வழக்கம் போல் கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரியில் டீ தூள் லோடு ஏற்றிக்கொண்டு கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், திருமலையம்பாளையம் அருகேயுள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுப்பதற்காக லாரியை விட்டு இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்த சக லாரி ஓட்டுநர்கள் கணபதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணபதி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

லாரி ஓட்டுநர் கணபதி மரணம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுக்க வந்த லாரி ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...